கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய முத்திரை ஒன்றையும் முன்னாள் அதிபர் ஹண்டி பேரின்பநாயகம் ஞாபகார்த்த முத்திரையையும் தபால் திணைக்கள பிரதி மா அதிபர் ஆர்.பி.டி. காமினி வியாழக்கிழமை 22-07-2010 பகல் 12.30 மணியளவில் வெளியிட்டு வைத்தார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் 3ம் நாளும் இறுதி நாளான இன்று காலை 9 மணிக்கு சி.கே.கந்தசாமி அரங்கில் முன்னாள் அதிபர் , நூற்றாண்டு விழாச் சபை செயலாளருமான பொ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று காலை 9 மணிக்கு நாகலிங்கம் அரங்கில் முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான அ. பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்றது
விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலி இருந்து அழைத்து வரப்பட்டனர் பிரதம விருந்தினராக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன். சிறப்பு விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர் வேதநாயகம், செந்தில் நந்தனன்,சுகிர்தலக்சுமி ஆகியோருடன் சுவாமிகளின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.